கொஞ்சம் இல்லை கொஞ்சம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ப்ளாக் எழுதுறேன்.வேலைப்பளுவும்,சோம்பேறித்தனமும் காரணங்களாக காட்டிவிட்டு கல்லூரி நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாமா?
அந்த மறக்க முடியாத காலேஜ் டேஸ் முதல் சுற்றுலாவை பத்தி தான் இன்றைய பதிவு..
மூன்று நாட்கள் கொடைக்கானல் டூர் ..
ஹ்ம்ம் எல்லாருக்கும் இதே சாய்ஸ் ..
ஆர்கனைஸ் பண்ணும் குழுவில் நானும் ஒருவன்..காரணம் என்னோட நேட்டிவ் வத்தலக்குண்டு (கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள ஊர்) என்பதால்.
சென்னையில் இருந்து கொடைரோடு வரை ரயில் பயணம்..
கொடைரோடில் இருந்து பஸ்ஸில் கொடைக்கானலுக்கு
..ஓகே டன்!
லெக்சரர்ஸ் யாரை அழைத்து செல்லலாம்?
மாணவர்கள் அனைவரின் ஏகோபித்த சாய்ஸ் பயோகெமிஸ்ட்ரி மேடம் தான்!
அவ்வளவு ரசிகர்கள் அவங்களுக்கு..முக்கியமா பசங்களுக்கு !
இன்னொரு male staff ..வேற யார் நம்ம Dr.ஷங்கர் சார்.. இதுவும் மாணவர்களின் ஏகோபித்த
சாய்ஸ் தான் காரணம் அவர் நாங்க பண்ணும் லூட்டிகளை கண்டும் காணமல் போகும் மா மனிதர்!
எங்களை வாட்டி எடுக்க நினைத்தால் அவர் வகுப்பில் கேட்கும் ஒரே கேள்வி "பாலியாக்ரிலிக் இட்டகொனிக் ஆசிட்" பத்தி தான் !
இப்படியாக ப்ளான் போட்டு இனிதே துவங்கியது எங்கள் கொடைக்கானல் சுற்றுலா..
பஸ்,தங்கும்விடுதி ஏற்பாடுகளை கவனிக்க
நான் மட்டும் ஓரிரு தினங்களுக்கு முன்னரே சென்று சென்றுவிட்டேன்..
மொத்த வகுப்பில் அஞ்சு பேர தவிர எல்லாரும் டூர் வர சம்மதம்..
சென்னை எக்மோரில் இருந்து ட்ரெயின் கிளம்பியாச்சு..
அதிகாலை 5மணிக்கு வந்து கொடைரோடு சேரும்.
நான் ரெடியா பஸ் எடுத்துட்டு போயி கொடைரோடு ரெயில்வே ஸ்டேஷனில் நிக்கணும்.
முதல் கல்லூரி டூர் .. முந்திய இரவு இந்த எக்சைட்மெண்ட்ல தூக்கமே வரல..
அங்கே நம்ம ஃ பிரெண்ட்ஸ் எல்லாம் இந்நேரம் ஜாலியா ட்ரெயினில் லூட்டி அடிச்சுட்டு வருவாங்க நான் மட்டும் அந்த ட்ரெயின் ஜர்னி மிஸ் பண்றேனே.. :(
இப்படியாக கழிந்தது அன்றைய இரவு.. அதிகாலை அலாரம் அடிப்பதற்கு
முன்னரே எழுந்து ரெடி ஆகி பஸ்ஸ கெளப்பி கொடை ரோடு ரெயில்வே ஸ்டேஷனுக்கு நேரத்துக்கு போய் சேர்ந்தாச்சு..
கண்ணில் தெரியும் தூரத்தில் ட்ரெயின் வந்து கொண்டு இருந்தது.. பிளாட்பார்ம் நோக்கி வரும்போதே ஒரே அமர்க்களம்.. எல்லாரும் கூச்சலும் கொண்டாட்டமுமாக .. அஞ்சுமணிக்கு அந்த ஸ்டேஷனே அப்படி ஒரு விழாக் கோலம் பூண்டதில்லை போலும்.. எல்லாம் ஒரு மாதிரியா வெறிச்சு பார்த்தானுங்க..
ட்ரெயினில் வந்த நண்பர்கள் 52 பேரும் என்னை வரவேற்தது போல அம்புட்டு ஆரவாரம். அம்புட்டு மகிழ்ச்சி..
எல்லாரும் பஸ் ஏறிய சில நிமிடங்களிலேயே பாடல்கள் கும்மாளம் ஆரவாரத்துடன் கொடைகானல் நோக்கி பேருந்து பயணம்
இன்னும் சொல்ல நெறையா இருக்கு.. அடுத்த போஸ்டுல தொடரும்...



























